இது கடைசியா நான் பார்த்த படம். பேய் படமா இல்லை Thriller படமா என்று தெரியாமலேயே போனேன். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் வரைக்கும் என்ன விதமான படம் என்றே தெரியவில்லை. அமெரிக்காவில் வாழும் ஒரு தம்பதியரின் அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை படம் சொல்லிக் கொண்டே போகிறது படத்தின் முதல் பாகம். பிரசன்னா, சினேகா அவர்கள் குழந்தை, அவர்களது புது வீடு, மற்றும் பிரசன்னாவின் அலுவலகம். இப்படியே மாற்றி மாற்றி காண்பித்து கொண்டிருக்கும்போது ஒரு திடீர் திருப்பம்.
அவர்கள் வீட்டுக்கு Paint அடிக்க வரும் Painter குழைந்தைகளை கடத்தி செல்வபவன். அவன் எப்படி அந்த குழந்தையை கடத்த முயல்கிறான், அந்த முயற்சியால் வென்றானா இல்லை தோற்றானா என்பதுதான் மீதி கதை.
ஒரு குழந்தைக்கு அம்மா அப்பாவாக நடிக்க முன்வந்த சினேகாவுக்கும் பிரசன்னாவுக்கும் வாழ்த்துக்கள். படம் கொஞ்சம் போர்தான் என்றாலும் இரண்டாம் பாகம் ரசிக்க முடிகின்றது. அந்த அமெரிக்க வில்லன் மிரட்டியிருக்கிறார். அபாரமான நடிப்பு.
இந்த படம் கமர்ஷியலா ஜெயிக்குமா என்பது கொஞ்சம் சந்தேகம்தான் என்றாலும், நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். படம் முடியும்போது ஒரு டாகுமெண்டரி படம் பார்த்த அனுபம்தான் ஏற்படுகிறது. "Children are not safe even at home" என்று புரியவைக்கிறார்கள். உண்மைதான்.
Saturday, July 25, 2009
தனிமை விரும்பி
தனிமை எவ்வளவு கொடுமை என்பது அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். ஆனால் நான் இதில் சற்று விதிவிலக்கு. எனக்கு தனிமைதான் மிகவும் பிடிக்கும். நான் ஒரு தனிமை விரும்பி. கடந்த ஏழு வருடங்களில் (கடைசி ஒரு வருடம் தவிர) குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்ததால் என்னவோ, அதுவே பழகிப் போச்சு. சிலபேர் என்னை ஆச்சர்யமாக கேட்டதுண்டு எப்படி தனிய இருக்க முடிகிறதென்று.
நான் தனியாக இருக்கும்போது பற்பல எண்ணங்கள் என்னைத் தாண்டி செல்வதுண்டு. அவை பெரும்பாலும் கடந்த சில தினங்களில் நடந்தவைகளின் அசைபோடுதலாக இருக்கும். சில சமையும் தேவை இல்லாததை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டு இருப்பதும் உண்டு. நான் செய்ய நினைத்து செய்ய முடியாமல் போனவையெல்லாம் சிலசமயம் மனதில் தோன்றும்.
முடிந்தவரை நான் மனதை கட்டுப் படுத்தி வைத்துக் கொள்ள முயற்சி செய்வதுண்டு. செய்து கொண்டும் இருக்கின்றேன்.
(பதிவு போட்டு ஒரு வருஷம் ஆயிடுத்து. அதான் சும்மா எதாவது எழிதிக் கிருக்க்கலாம்முன்னு.... :) )
நான் தனியாக இருக்கும்போது பற்பல எண்ணங்கள் என்னைத் தாண்டி செல்வதுண்டு. அவை பெரும்பாலும் கடந்த சில தினங்களில் நடந்தவைகளின் அசைபோடுதலாக இருக்கும். சில சமையும் தேவை இல்லாததை நினைத்து கவலைப் பட்டுக் கொண்டு இருப்பதும் உண்டு. நான் செய்ய நினைத்து செய்ய முடியாமல் போனவையெல்லாம் சிலசமயம் மனதில் தோன்றும்.
முடிந்தவரை நான் மனதை கட்டுப் படுத்தி வைத்துக் கொள்ள முயற்சி செய்வதுண்டு. செய்து கொண்டும் இருக்கின்றேன்.
(பதிவு போட்டு ஒரு வருஷம் ஆயிடுத்து. அதான் சும்மா எதாவது எழிதிக் கிருக்க்கலாம்முன்னு.... :) )
Subscribe to:
Posts (Atom)