நினைத்தேன் எழுதுகிறேன்: திருநங்கைகள்

Tuesday, June 10, 2008

திருநங்கைகள்

இரண்டு வருடம் முன்பு முதல் முறையாக மும்பை சென்ற பொது, திருநங்கைகளால் பயணம் மிகவும் கசப்பானதாக அமைந்துவிட்டது. அவர்களைப் பற்றி கேள்விப் பட்டிரிந்த போதும் அதிகம் நான் அவர்களை பார்த்ததில்லை. சில நண்பர்கள் முன்னரே என்னை எச்ச்சரிதிருந்தனர். சென்னை -இல் இருந்து புறப்பட்டு ரயில் ஆந்தரபிரதேஷ் செல்லும்போது ஒவ்வரு கூட்டமாக வர ஆரம்பித்தனர். ஒவ்வருவரும் வந்து அங்கிருந்த இளம் ஆண்களிடம் பணம் கேட்டு இம்சை செய்தனர். என் கம்பார்மேன்டில் நிறைய பெண்கள் இருந்ததால் பெரும்பாலும் அவர்கள் அங்கு நின்று பணம் கேட்கவே இல்லை. வண்டி பூனே சென்றவுடன் என் கம்பர்ட்மேன்டில் இருந்த அனைவரும் இருங்கிவிட நான் மட்டும் தனியாக மாட்டிக்கொண்டேன். சும்மா தூங்குவது போல கொஞ்சம் நேரம் நடித்து பார்த்தேன். பயனில்லை - என்னை எழுப்பி பணம் கேட்டார்கள். ஒரு கும்பல் பணம் கேட்டு ரொம்ப தொந்தரவு செய்யவே நான் பணம் தர முடியாது என்று சொன்னேன்.

"ஏய்! நாங்கெல்லாம் தமிழ் பொண்ணுக. காசு குடு." ஒரு திருநங்கை ஆரம்பித்தது.

"என்னது? தமிழ் பொண்ணுங்களா? இப்படி சொல்லி எங்க ஊர் பொண்ணுங்கள கேவலை படுத்தாத." இது நான்.

"ஏய்! எப்ப நீன் பணம் கொடுக்கல, நான் புடவைய அவுதுடுவேன்" இது அவள் (அல்லது) அவன்.

"ச்ச்சீ கருமம் போய்த் தொலை" திட்டிப் பார்த்தேன்.

"பணம் வாங்காம போக முடியாயது. இப்ப பணம் தர பொரிய இல்லம் முத்தம் கொடுகட்டுமா?"

அந்த முகம் என்னை நோக்கி வாரம் ஆரம்பித்தது. உதடு முழுக்க உதட்டு சாயம். நான் இப்போ கொஞ்சம் பயந்துட்டேன்.

"சரி சரி பணம் தாரேன். ஆனா கொடுத்த பிறகு இந்த இடத்த விட்டு ஓடிப்போகனும்? OK வா?" கண்டிஷனுடன் பாக்கேட்டுக்குள்ள கையை விட்டேன். வெறும் ஒரு ரூபாய் தான் இருந்தது. தைரியமா எடுத்து கொடுத்தேன். ஒரு நங்கை மிகுந்த கோபத்துடன்

"ஏன்டா? பேண்டு சட்டையெல்லாம் போட்டுருக்கேள்ளே? வெறும் ஒரு ரூபா கொடுக்கற?" என்று சொல்லி மறுபடியும் அவர்களுடைய முத்தம் ஆயுதத்தை எடுத்தார்கள். நான் பயந்து இன்னுரு அஞ்சு ரூபா கொடுத்தேன். ஆகா ஆறு ரூபாயோடு அந்த eipisode முடிந்தது. என்ன செய்வது.

எத்தனயோ மனித உரிமை காவலர்கள் இவர்களுக்காக குரல்கொடுத்து கொண்டு இருக்கும்போது, இவர்கள் இப்படி நடந்து கொண்டால், இவர்கள்மீது கொஞ்சம் நஞ்சம் இருக்கும் இரக்கமும் போய்விடும். இவர்களின் அட்டூழிங்களை போலீஸ் கண்டுகொள்ளாமல் விட்டால், ரயில் பயணம் ஒரு nightmare - அக போய்விடும்.

No comments: