நினைத்தேன் எழுதுகிறேன்: இன்று என் பிறந்தநாள

Tuesday, June 10, 2008

இன்று என் பிறந்தநாள

இன்று இரண்டு காரணங்களுக்காக சிறப்பான நாள். ஒன்று என் பிறந்தநாள். இன்னொன்று இதுதான் நான் முதல்முறையா கொண்டாடும் பிறந்தநாள். நாம் பிறந்தது முதல் என்ன சாதித்துவிட்டோம் பிறந்தநாள் கொண்டாட என்ற எண்ணம் தான் என்னை இது நாள் வரை இது பற்றி சிந்திக்காமல் இருக்க செய்தது.
.
பெரிய தலைவர்கள் பிறந்தநாள் கொண்டாதும்போது அவர்களுக்காக இந்த நாடே கொண்டாடுகிறது. குறைத்தபட்சம்அவர்களை சார்ந்த ஒரு கூட்டம் மட்டுமாவது கொண்டாடுக்கிறது. ஆனால் நாம் கொண்டாட வேண்டுமானால் நாமே தான் கொண்டாடிக் கொள்ளவேண்டும். அந்த வெறுப்புததான் - வேறொன்றுமில்லைஆனால் இந்த முறை இது சற்று வித்தியாசமாக அமைந்தது. காலை நான் வழக்கம் போல நடைபயிற்சிக்குப் போய் விட்டேன். திருன்பி வந்து பார்த்தபோது மிஸ்ட் கால்ஸ் இருந்தது. சிறிது நேரம் கழித்துத்து கால் வந்தது, என் வருங்கால மாமனார் வீட்டிலிருந்து. பிறகு அவர்களே மீண்டும் தொலைபேசியில் அழைத்து அனைவரும் வாழ்த்து சொன்னார்கள். பிறகு வழக்கம் போல ஆஃபீஸ் போய்விட்டேன். சிறிது நேரம் வேலை செய்து விட்டு, அம்மாவிற்கு நானே போன் செய்து விவரம் சொல்லி வாழ்த்து பெற்றேன். அப்பறம் சாயங்காலம் அலுவலக நண்பர்கள் எல்லாரும் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார்கள். ஒரு சட்டை பரிசளித்தார்கள். யாரோ சிலர் நாம் பிறந்த நாளை கொண்டாடுவது என்ற அனுபவம் மிகவும் பரவசமாக இருந்தது. அவர்கள் என் பெற்றொல்கள் இல்லை. சொந்தம் இல்லை. இருந்தபோதும் கொண்டாடினார்கள். எனக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. வீட்டுக்கு வந்த நன்றாக குளித்து விட்டு பக்கத்தில் இருக்கும் ஒரு கோவிலுக்கு சென்று மணமுறுக வேண்டினேன். மிகவும் ஆத்மார்த்தமாக இருந்தது. அப்படியே உணவகம் சென்று சாப்பிட்டுவிட்டு வீட்டுக்கு வந்து விட்டேன்.

அவ்வளவுதான், இன்றைய பொழுது. இதை டைப் அடித்துவிட்டேன், இப்போ போய் தூங்க போறேன்.

No comments: