வீடு வாங்கலியோ வீடு.
கடந்த ஒரு வரமாகவே நிறைய குழம்பி போய்விட்டேன். இன்னும் இரண்டு மாதத்தில் திருமணம் நடக்க இருக்கிறது. வீடு பார்க்க வேண்டும். வாடகை வீடு பார்க்கலாமா இல்லை சொந்த வீடு வாங்கலாமா என்பது முதல் குழப்பம். சொந்த வீட வாங்க இது சரியான நேரமா என்பது இரண்டாவது குழப்பம். Real Estate Price எகிறிப் போய் நிற்கிறது. இன்னும் கொஞ்சம் நாள் கழித்து விலையெல்லாம் இறங்கும் என்று சொல்கிறார்கள். அப்படியே சொந்த வீடு வாங்கலாம் என்றாலும் எவ்வளவு Home Loan எடுப்பது, எவ்வளவு வருடம் எடுத்தால் நமக்கு லாபம் என்பது மூன்றாவது குழப்பம். சரி Loan எடுப்பதாகவே வைத்துக் கொண்டாலும், Bank 85% மேல தராது. சரி மீதிப் பணத்துக்கு எங்க போவது. கையில் இருப்பது காலணாவுக்கு போறாது. அதுவும் கூட பேங்க் -இல் தான் கடன் வாங்க வேண்டும். இப்படி ஏகப்பட்டது கடன் வாங்கினால் மாத வருமானத்தில் பெரும்பகுதி EMI கட்டவே போய் விடும், பின்ன குடும்பம் எப்படி செய்வது. இப்போது எவ்வளவு செலவாகிறது என்று தெரியல. கணக்கு எதுவும் பார்க்கவில்லை. ஆனால் கல்யாணத்துக்கு அப்பறம் இதைவிட இரண்டு மடங்கு செலவாகும். அதையும் யோசித்து பார்க்க வேண்டும். பணவீக்கம் நாளுக்கு நாள் மோசமா வீங்கிக் கொண்டே போகிறது.
வீடு பார்த்து முடிவு செய்வது என்பது சாதாரண விஷயமே இல்லை. நம் மனதில் ஆயிரம் இருக்கும். அத்தனையும் அந்த வீட்டில் இருக்காது. எதோ கொஞ்சமாவது சமரசம் செய்தாக வேண்டும். சில ஆண்டு முன்பு வரை Car Parking என்பது ஒரு அடம்பரமாகவேதான் காணப் பட்டது. அதனாலேயே பல அடுக்கு மாடி வீடுகள் Car Parking இல்லாமலேயே கட்டப் பட்டது. ஆனால் இன்று நிலைமை வேறு. Car Parking இல்லையென்றால் அந்த வீடு பாதி விலை தான் போகிறது. அதுவும் ஒரு வகையில் சரிதான். Car Parking இல்லையென்றால் Car -யை எங்குதான் நிறுத்துவது. "இப்போல்லாம் இது ஒரு பிரச்சனையே இல்ல சார். ரோட்டுல எவ்வளவு இடம் இருக்கு பாருங்க. இங்க நிறுத்திக்கலாம்." - வீட்டு புரோக்கர்கள் பொதுவாக சொல்லும் காரணம். வீடு அந்த தெருவில் கடைசி வீடாக இருந்தால் ரோட்டில் நிறுத்துவது பெரும்பாலும் ஒரு பிரச்சனையாக இருக்காது. ஆனால் எங்காவது வெளியூர் போய்விட்டு நாலு நாள் கழித்து வந்து பார்த்தால், காரில் ஒரு சில spare parts மட்டுமே இருக்கும். சில இடங்களில் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இன்னொரு பிரச்சனை, சென்னையை விட்டு வேறு இடத்துக்கு போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் என்ன செய்வது. இங்க வீட்டை சும்மா விட்டுவிட்டு போக முடியாது. வாடகைக்கும் தைரியமாக விட முடியாது. இது அடுத்த பிரச்சனை.
கடைசி மிக முக்கியமான பிரச்சனை, ஒருவேளை நான் பார்த்த வீடு என் மனைவிக்கு பிடிக்கலைன்னா? இது பெரிய பிரச்சனை. சரி, திருமணத்துக்கு அப்பறம் வீடு பார்த்துக்கலாம். ரெண்டு பெரும் சேர்த்தே வீடு பாக்க சுத்தலாம். இதில் இன்னொரு சவ்கரியம் இருக்கிறது. கல்யாணம் முடிஞ்சு எவ்வளவு பணம் கையில் இருக்கிறது, எவ்வளவு கடனில் இருக்கிறது, எவ்வளவு மாதம் செலவாகிறது, எவ்வளவு சேமிக்க முடிகிறது.. இவை எல்லாவற்றையும் கணக்கு பார்த்து அதுக்கு தகுந்தாற்போல ஒரு வீடு பார்த்துக்கலாம். குறைந்த பட்சம் நான் மட்டும் இப்படி மண்டையை போட்டு உடைத்துகே கொள்ள வேண்டாம். Share பண்ணிக்க ஒருத்தர் இருப்பாங்களே!
எனக்கு தெரிந்து என்னுடைய மிகப்பெரிய minus point, நானா எந்த பெரிய முடிவும் எடுக்காமல், பலபேரிடம் யோசனை கேட்டு, ஒவ்வொருத்தர் சொல்லும் யோசனைக்கும் தலையாட்டுவதுதான். ஒருவர் ஒரு கருத்தை சொல்லி முடித்த பிறகு என் மன நிலையும் அதுவாகவே மாறுகிறது. பிறகு வேறொருவர் ஒரு கருத்தை சொன்னவுடன், இது போய் புதிய மனநிலமைக்கு வந்து விடுகிறேன். என் நண்பர்கள் சில பேர் அவர்கள் எடுத்த முடிவில் உறுதியாக நிற்பதை பார்க்கும் பொது எனக்கு பொறாமையை கூட இருக்கிறது. நம்மால் இப்படி இருக்க முடியவில்லையே என்று. I feel I am extremely volatile.
ஹ்ம்ம். இன்னைக்கு நாலு முழுக்க நல்லா குழம்பியாட்சி. வீட்டுக்கு வந்து எல்லாத்தையும் டைப் அடிச்சி கொட்டியாட்சு. இப்போ வேற எதையாவது நினைக்கலாம்.. சாரி குழம்பலாம்!!!!.
Monday, June 30, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment