நினைத்தேன் எழுதுகிறேன்: "காத்தவராயன்" - Review

Saturday, June 7, 2008

"காத்தவராயன்" - Review

நேற்று "காத்தவராயன்" படம் பார்க்க சென்றிருந்தேன். படம் பார்த்து முடித்த பிறகு, இதை blog -இல் எழில்தியே ஆக வேண்டுமென முடிவெடுத்தேன். காரணம்? - யாம் பெற்ற இன்பம் பிறர் பெறலாம். துன்பமும் பெற வேண்டுமா? கரண் நடித்தே முந்தைய இரண்டு படங்களும் ஓரளவு எனக்கு பிடித்தால் இந்த படத்துக்கு நம்பி போனேன் . சரியான ஏமாற்றந்தான் மிஞ்சியது. கரனின் நடிப்பு கொஞ்சம் பரவாயில்லை. மற்றபடி இந்த படத்தில் ஒரு மண்ணும் இல்லை. கதாநாயகியாக வரும் நடிகையை எங்கேயிருந்து பிடித்து கொண்டு வந்தாங்களோ தெரியல. சும்மா ஒரு தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையை நடிக்க வச்சிருக்கலாம். அதுவாவது, தலைய ஆட்டிருக்கும். இவருக்கு அது கூட தெரியல.

வடிவேலு என்ன என்னவோ செய்து பார்க்கிறார். ஆனால் நமக்குத்தான் சிரிப்பே வர மாட்டேங்குது. என்ன பண்றது? வடிவேலு வந்தாலே போதும், வேறு எதுவும் வேண்டாம், மக்கள் சிரிப்போ சிரிப்புன்னு சிரிப்பாங்கன்னு நினைக்கிறது முட்டாள்தனம் என்பது இப்போ புரிஞ்சுருக்கும். காமெடி சிறப்பு வரானமுன்னா அந்த script ஒழுங்கா வந்திருக்கணும். ஆனா, எல்லாமே சொதப்பலா முடிஞ்சிடுச்சு. ஒரு முழு நீல நகைச்சுவை படமா வந்திருக்கு வேண்டிய படம், இவர் பண்ணு சொதப்பள்ள, ஒரு சொதப்பல் படமா அமைஞ்சிடுச்சி.

படத்துல, எல்லா கேரக்டருமே எதோ கடமைக்கு நடிச்சி முடிச்சிட்டு அடுத்த ஷூட்டிங் லேட் ஆகறது போல ஓடுறாங்க. வில்லன் நடிகரை நாம் பல படங்களில் சாதரண அடியால் வேஷத்தில் பார்த்ததால், இங்கே அவர் சுத்தமா எடுபடவே இல்லை.

மத்தபடி, எனக்கு படம் பார்க்கும்போது, தூர்தர்ஷனில் செவ்வாய்க்கிழமை வரும் நாடகம்தான் ஞாபகத்துக்கு வந்தது.

சமீபத்தில் வந்த உருப்படாத படத்துக்கான award "துள்ளல்" படத்துக்கு அப்பறம் இந்த படதுக்குதன் கொடுக்கனு. இதற்கடுத்து, சுந்தர் நடித்த "சண்டை".

No comments: